பெரிய புராணம் தோன்றிய கதை | பெரியபுராணம் பாடல் | நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய | சிவன் பக்தி பாடல்கள்

பெரியபுராணம் தோன்றிய கதை:
தொண்டை மண்டலத்தில் புகழ்பட விளங்கியது குன்றத்துார் (காஞ்சிபுரம்). அங்கு வேளாண் குடியில் சேக்கிழார் மரபில் பிறந்தவரே அருண்மொழி ராமதேவர்.

இவர்தான் பெரியபுராணம் என்னும் பொக்கிஷத்தை அருளிய சேக்கிழார். ஒழுக்கம், அரசியல் ஆற்றல், நாவன்மை, புத்திக்கூர்மையை இவர் பெற்றிருந்தார்.

இவருடைய தந்தை சோழ அரசன் அநபாயனிடம் அமைச்சராக இருந்தார். 'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' என்ற மூதுரைக்கு ஏற்ப, சேக்கிழாரை தலைமை அமைச்சராக்கினார் அரசர். பின் அவர் திறமையாக செயல்பட்டு, 'உத்தம சோழப் பல்லவர்' என்ற பட்டத்தை பெற்றார்.

ஒருமுறை திருநாகேஸ்வரத்திற்கு (தஞ்சாவூர்) சென்று சிவபெருமானை தரிசித்ததால், அவர் மீது காதல் கொண்டார் சேக்கிழார். இதனால் தன் ஊரான குன்றத்துாரில் கோயில் கட்டி, சுவாமிக்கு 'திருநாகேஸ்வரர்' என பெயரிட்டார். இப்படி இவர் திருப்பணிகளை செய்தபோது, அரசர் சிற்றின்பத்தில் காலத்தை கழித்தார்.

திருத்தக்கத்தேவர் எழுதிய சீவக சிந்தாமணியை (சமண நுால்) கற்றும், கேட்டும் வந்தார். 'தமிழகத்தில் சமணக் கொள்கை வேரூன்றி விடுமோ' என பயந்தார் சேக்கிழார்.

ஒருநாள் அரசரிடம், ''சமண நுால்களை படிப்பது பயனற்றது. நல்ல கறவைப் பசு இருக்க மலட்டுப் பசுவிடம் பாலை எதிர்பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது உங்களது செயல். சிவபெருமானின் கதைகளை படியுங்கள். இம்மை, மறுமை, வீடு ஆகிய மும்மைக்கும் அவை நன்மை பயக்கும்'' என்றார்.

''அப்படியா அமைச்சரே! சிவக்கதைகளுக்கு முதல் நுால் ஏதேனும் உண்டா?'' எனக் கேட்டார்.

''சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை ஆதாரமாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நுாலைப் பாடியுள்ளார். அதை செப்பேடு செய்து பத்திரப்படுத்தியுள்ளார் மன்னர் ராஜராஜசோழன். அந்த வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்'' என வேண்டினார்.

இதை அநபாயச் சோழனும் ஏற்க, சேக்கிழார் சிவனடியார்களின் வரலாற்றை விவரிக்க ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

''அமைச்சரே! இவர்களது வரலாற்றை காவியமாக்கித் தந்தருள வேண்டும்'' என வேண்டினார் அரசர்.
அவரும் இம்மையில் தான் பெற்ற வரத்தை எண்ணி வியந்தார். பிறகு அதற்கு தேவையான பொன்னையும், பொருளையும் பெற்று சிதம்பரத்திற்கு சென்றார். நடராஜரை வணங்கி காவியம் பாடும் திறத்தை வேண்டினார். அப்போது விண்வழியே, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்ற அடியை முதலடியாய் எடுத்துக் கொடுத்தார் நடராஜர்.

தித்திக்கும் தேனமுதம் போல் பக்திச் சுவைப் பெருக்கோடு, தேன் சிந்தும் தமிழில் பாடிமுடித்தார். இதுதான் பெரியபுராணம். சித்திரை மாதம் திருவாதிரையன்று அரங்கேற்றமான பெரியபுராணம் பதினொரு திருமுறை களுடன் சேர்ந்து பன்னிரண்டாவது திருமுறையானது.

பெரிய புராணம்:
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!!


நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய:
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய நம சிவாய நம சிவாய ஓம்நம சிவாய

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய நம சிவாய நம சிவாய ஓம்நம சிவாய

ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய

சிவா சிவா ஹரனே சொனாச்சலனே அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நம சிவாய

அனலே நமசிவாயம், அழலே நமசிவாயம், கனலே நமசிவாயம், காற்றே நமசிவாயம்

புலியின் தோலை இடையில் அணிந்த புனித கடலே போற்றி சிவா ஓம் நம சிவாய

கலியின் தீமை யாவும் நீக்கும், கருணை கடலே போற்றி ஹர ஓம் நம சிவாய

புனலே நமசிவாயம், பொருளே நமசிவாயம், புகழே நமசிவாயம், புனிதம் நமசிவாயம் (நம சிவாய)


சிவனார் கங்கை கரையில் அமர்ந்த சீதள ஒளியே போற்றி சிவ ஓம் நம சிவாய

தவமே செய்யும் தபோ வனத்தில் ஜ்யோதி லிங்கனே போற்றி ஹர ஓம் நம சிவாய

வேதம் நமசிவாயம்,நாதம் நமசிவாயம்,பூதம் நமசிவாயம்,போதம் நமசிவாயம்,

மனிபுரகமாய் சூட்சமம் காட்டும் அருணாசலனே போற்றி சிவா ஓம் நம சிவாய

மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே,செங்கனல் வண்ணா போற்றி ஹர ஓம் நம சிவாய

அன்பே நமசிவாயம்,அணியே நமசிவாயம்,பண்பே நமசிவாயம்,பரிவே நமசிவாயம். (நம சிவாய)

நினைத்த உடனே முக்தியை தந்திடும் அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய


நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட சந்நிதி கொண்டாய் போற்றி ஹர ஓம் நம சிவாய

அருளே நமசிவாயம்,அழகே நமசிவாயம்,இருளே நமசிவாயம்,இனிமை நமசிவாயம்

சித்தர் பூமியாய் சிவாலயம் காட்டும் அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய

பக்தர் நெஞ்சினை சிவமயம் ஆக்கும் சிவபெருமானே போற்றி ஹர ஓம் நம சிவாய

உருவே நமசிவாயம், உயிரே நமசிவாயம், அருவே நமசிவாயம், அகிலம் நமசிவாயம் (நம சிவாய)


அன்னை உமைக்கு இடமாய் உடலில் ஆலயம் தந்தாய் போற்றி சிவா ஓம் நம சிவாய

சொன்ன வண்ணமே செய்யும் நாதனே சொனாச்சலனே போற்றி ஹர ஓம் நம சிவாய

ஆதியும் நமசிவாயம்,அந்தமும் நமசிவாயம்,ஜ்யோதியும் நமசிவாயம்,சுந்தரம் நமசிவாயம்

சூரியன் சந்திரன் அஷ்டவசுக்கள் தொழுதிடும் நாதா போற்றி சிவா ஓம் நம சிவாய

சுந்தரி உன்னமுளையுடன் திகழும் அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நம சிவாய

சம்புவும் நமசிவாயம், சத்குரு நமசிவாயம், அம்பிகை நமசிவாயம்,ஆகமம் நமசிவாயம் (நம சிவாய)


எட்டா நிலையில் நெட்டை எழுந்த ஏக லிங்கனே போற்றி சிவா ஓம் நம சிவாய

பட்ரா இருந்து பற்றும் எவர்க்கும் பாதை காட்டுவாய் போற்றி ஹர ஓம் நம சிவாய

கதிரும் நமசிவாயம்,சுடரும் நமசிவாயம்,உதிரும் நமசிவாயம்,புவனம் நமசிவாயம்

ஜ்யோதி பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய

ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலை போற்றி ஹர ஓம் நம சிவாய

குளிரே நமசிவாயம், முகிலும் நமசிவாயம், கனியும் நமசிவாயம், பருவம் நமசிவாயம். (நம சிவாய)


குமரகுருவான குகனே பணிந்த குருலிங்கேச போற்றி சிவா ஓம் நம சிவாய

இமையமலை மீதி வாசம் புரியும் அமரோர் அரசே போற்றி ஹர ஓம் நம சிவாய

மண்ணும் நமசிவாயம், மரமும் நமசிவாயம், விண்ணும் நமசிவாயம், விளைவும் நமசிவாயம்

மனிமையம் ஆகிய மந்திர மலையில் சுந்தரம் ஆணை போற்றி சிவா ஓம் நம சிவாய

அணியபாரணம் பல வகை சூடும் அருணாசலனே போற்றி ஹர ஓம் நம சிவாய

மலையே நமசிவாயம், மலரே நமசிவாயம், சிலையே நமசிவாயம், சிகரம் நமசிவாயம். (நம சிவாய)


கம்பத்திளையான் குகனை கண்ணில் படைத்த சிவனே போற்றி சிவா ஓம் நம சிவாய

நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும் நாகாபாரனா போற்றி ஹர ஓம் நம சிவாய

திருவே நமசிவாயம், தெளிவே நமசிவாயம், கருவே நமசிவாயம், கனிவே நமசிவாயம்

அருணை நகரசிகரம் விரிந்த அக்னி லிங்கனே போற்றி சிவா ஓம் நம சிவாய

கருணையை வேண்டி காலடி பணிந்து சரணம் செய்தோம் போற்றி ஹர ஓம் நம சிவாய

பெண்ணும் நமசிவாயம், ஆணும் நமசிவாயம், எண்ணம் நமசிவாயம், ஏகம் நமசிவாயம். (நம சிவாய)


மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த முக்கண் அரசே போற்றி சிவா ஓம் நம சிவாய

தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே சூலனாதனே போற்றி ஹர ஓம் நம சிவாய

ஒளியே நமசிவாயம், உணர்வே நமசிவாயம்,வெளியே நமசிவாயம், இசையே நமசிவாயம்

மௌன வடிவாகி மோகனம் காட்டும் மூர்த்தி லிங்கனே போற்றி சிவா ஓம் நம சிவாய

ஞானம் வழங்கி நற்கதி அருளும் நந்தி வாகன போற்றி ஹர ஓம் நம சிவாய

ராகம் நமசிவாயம், ரகசியம் நமசிவாயம், யோகம் நமசிவாயம், யாகம் நமசிவாயம். (நம சிவாய)


அர்தனாரியாய் வித்தகம் செய்யும், அருணாசலனே போற்றி சிவா ஓம் நம சிவாய

நர்த்தனம் தாண்டவம் நாடகம் ஆடும் நாக நாதனே போற்றி ஹர ஓம் நம சிவாய

அதிர்வும்நம சிவாயம்,அசைவும் நமசிவாயம், இலையும் நமசிவாயம்,நிறைவும் நமசிவாயம்

ரமண முனிக்கு ரகசியம்,சொன்ன ராஜ லிங்கனே போற்றி சிவா ஓம் நம சிவாய

இமையோர் தலைவன் பதவியும் வழங்கும் ஈச மகேச போற்றி ஹர ஓம் நம சிவாய

கொடையும் நமசிவாயம், கொண்டாலும் நமசிவாயம், வாடையும் நமசிவாயம், தென்றலும் நமசிவாயம் (நம சிவாய)


பரணி தீபமாய் தரணியில் ஒளிரும் பரமேஸ்வரனே போற்றி சிவா ஓம் நம சிவாய

ஹர ஹர என்றால் வர மழை பொழியும் ஆதிளிங்கனே போற்றி ஹர ஓம் நம சிவாய

சித்தியும் நமசிவாயம்,முக்தியும் நமசிவாயம்,பக்தியும் நமசிவாயம்,சக்தியும் நமசிவாயம்

கார்த்திகை திருநாள் உற்சவம் காணும் தீப சுடரே போற்றி சிவா ஓம் நம சிவாய

தீர்த்தம் யாவிலும் நீரடிடுவாய் அருணாசலனே போற்றி ஹர ஓம் நம சிவாய

நிலவே நமசிவாயம், நிஜமே நமசிவாயம், கலையே நமசிவாயம், நினைவே நமசிவாயம். (நமசிவாய)


சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும் சொனாச்சலனே போற்றிசிவா ஓம் நம சிவாய

பொற்சபை தன்னில் அற்புத நடனம் புரியும் பரனே போற்றி ஹர ஓம் நம சிவாய

லிங்கம் நமசிவாயம், லீலையும் நமசிவாயம், கங்கையும் நமசிவாயம்,கருணையும் நமசிவாயம்

சோனை நதி தீரம் கோயில் கொண்ட அருணாசலனே போற்றி சிவா ஓம் நம சிவாய

வானவெளி தனை கோபுரம் ஆக்கி மலையில் நிறைந்தாய் போற்றி ஹர ஓம் நம சிவாய

செல்வம் நமசிவாயம், சேரும் நமசிவாயம், வில்வம் நமசிவாயம், வேஷம் நமசிவாயம். (நமசிவாய)


ஆதிரை அழகா ஆவுடை மேலே அமரும் தலைவா போற்றி சிவா ஓம் நம சிவாய

வேதியர் போற்றும் வேஞ்சடை இறைவா வேத பொருளே போற்றி ஹர ஓம் நம சிவாய

முதலும் நமசிவாயம், முடிவும் நமசிவாயம், இடையும் நமசிவாயம், விடையும் நமசிவாயம்

நாக முடியுடன் யோகம் புரியும் நாகேஸ்வரனே போற்றி சிவா ஓம் நம சிவாய

மேக நடுவிலே திருநீர் அணியும் அருநேஸ்வரனே போற்றி ஹர ஓம் நம சிவாய

அம்மையும் நமசிவாயம், அப்பனும் நமசிவாயம், நன்மையையும் நமசிவாயம், நாதனும் நமசிவாயம் (நம சிவாய)


அடிமுடி இல்லா ஆனந்த வடிவே அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய

அம்மை அப்பனை அகிலம் காக்கும் அமுதேஸ்வரனே போற்றி ஹர ஓம் நம சிவாய

அதுவும் நமசிவாயம்,இதுவும் நமசிவாயம், எதுவும் நமசிவாயம்,எதிலும் நமசிவாயம்

விடையம் காலை வாகனம் ஏரி விண்ணில் வருவாய் போற்றி சிவா ஓம் நம சிவாய

வேண்டிய கணமே எண்ணிய கணமே கண்ணில் தெளிவை போற்றி ஹர ஓம் நம சிவாய

சூலம் நமசிவாயம், சுகமே நமசிவாயம், நீளம் நமசிவாயம், நித்தியம் நமசிவாயம் (நம சிவாய)


பௌர்ணமி நாளில் பிரைநிலவனியும் மகாதேவனே போற்றி சிவா ஓம் நம சிவாய

ஔஷத மலையாய் பிணிகள் தீர்க்கும் அருணாச்சலமே போற்றி ஹர ஓம் நம சிவாய

தீபம் நமசிவாயம், திருவருள் நமசிவாயம், ரூபம் நமசிவாயம், ருத்ரம் நமசிவாயம்

பனி கைலாயம் தீ வடிவாகிய அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய

பணிவடிவாகிய தென்னடுடையாய் திருவருலேசா போற்றி ஹர ஓம் நம சிவாய

எங்கும் நமசிவாயம், எல்லாம் நமசிவாயம், எழிலும் நமசிவாயம், என்றும் நமசிவாயம். (நம சிவாய)


மந்திரமாவது நீறு:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே!

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!






Post a Comment

Previous Post Next Post