துன்பங்களை தூள் தூளாக்கும் கருட பஞ்சமி மந்திரம் || கருட பஞ்சமி மந்திரம் || தீராத கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம் || தீராத கஷ்டங்கள், நோய்கள், திருஷ்டி தோஷங்களை விரட்டும் சக்திவாய்ந்த பரிகாரம்

துன்பங்களை தூள் தூளாக்கும் கருட பஞ்சமி மந்திரம்:

கருட பஞ்சமி மந்திரம்:

கருட பஞ்சமி மந்திரம் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது தான் இந்த கருட பஞ்சமி. கருட பஞ்சமி நாளன்று அனைவரும் கருட பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கருட பகவானை வழிபாடு செய்வதன் மூலம் விபத்துகள் நேராமல் இருக்கும். மன தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இப்படி நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஆபத் பாண்டவனாக கருட பகவான் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரியக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக தான் கருட பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட கருட பகவானுக்குரிய நாளில் அவரை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரம்.

இந்த மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். 15 நிமிடம் மட்டும் இதற்காக நாம் ஒதுக்கினால் போதும்.

இந்த மந்திரத்தை கூறுபவர்கள் கட்டாயம் குளித்திருக்க வேண்டும். காலையிலேயே குளித்திருந்தாலும் தவறில்லை. இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக முகம், கை, கால்களை கழுவி விட்டு மந்திரத்தை உச்சரித்தால் போதும். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்தவித தடையும் கிடையாது.

சுத்தமாக இருக்கக்கூடியவர்கள் அதாவது தீட்டு இன்றி அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கருட பகவானை நினைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

ஒருவேளை பூஜை அறைக்கு செல்ல இயலாது என்பவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு கருட பகவானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் போதும்.

வீட்டில் தான் கூற வேண்டும் என்று இல்லை. ஆலயம் செல்பவர்கள் ஆலயத்திலும் கூறலாம்.

ஆலயத்திற்கும் செல்ல முடியாது வீட்டிற்கும் வர தாமதமாகும் என்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கருட பகவானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம்.

எந்த திசையை பார்க்க வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ஆனால் வெறும் தரையில் அமர்ந்து கூறக்கூடாது என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. ஒரு விரிப்பை விரித்தோ அல்லது மனைப் பலகை மீதோ அல்லது ஷேர் மீது அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மந்திரம்

“ஷம் ஷிபாய”


கருட பகவானின் பஞ்சாட்சர மந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு வார்த்தை மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களையும் தவிடு பொடி ஆக்கும். முழு நம்பிக்கையோடு கூறி முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.




தீராத கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம்:

தீராத கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம் சிவபெருமானுக்கு எப்படி நந்தி வாகனமாக இருக்கிறாரோ அதேபோல் தான் பெருமாளுக்கு வாகனமாக கருடாழ்வார் இருக்கிறார். எப்படி சிவாலயத்திற்கு செல்லும் பொழுது முதலில் நந்தி பகவானை வணங்கி அவரிடம் அனுமதி கேட்ட பிறகு உள்ளே செல்ல வேண்டுமோ அதே போல் தான் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பொழுதும் முதலில் கருடாழ்வாரை வழிபாடு செய்துவிட்டு அவரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் பெருமாளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும் என்று கூறலாம். பஎருமாளிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது, எந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த கோரிக்கையை கருடாழ்வார் இடம் நாம் கூறினாலேயே பெருமாள் அதை நிறைவேற்றி விடுவார் என்று கூட கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த கருடாழ்வாரின் மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தையும் நாம் உச்சரிக்கும் பொழுது ஒவ்வொரு விதமான பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் கருடாழ்வாருக்கும் பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. தீர்க்கவே முடியாத கஷ்டங்களும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கூற வேண்டிய மந்திரமும் இருக்கிறது. இந்த மந்திரத்தை தான் கருட பஞ்சமி நாளன்று நாம் கூற வேண்டும்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும். துளசி இலை இருக்கும் பட்சத்தில் அதை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறினால் கூடுதல் சிறப்புகள் உண்டாகும்.

இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு முறையும் அதிகபட்சம் தங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூறலாம். ஒரு முறை கூறினாலேயே நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து போகும் என்று கூறப்படுகிறது. முழுமனதோடு கருடாழ்வாரை நினைத்து இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது கருடாழ்வாரின் அருளால் நம்முடைய தீர்க்க முடியாத கஷ்டம் தீர்ந்து போகும்.

ஏதாவது ஒரு கஷ்டத்தை மட்டும் முன்வைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக எந்தவித உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

அரிஓம் றீம் கிலியும் சவ்வும் ஓம் கருடா வாவா ஓங்கார ஆங்கார ஓம் கருட பகவாய நம


கருடாழ்வாரை முழுமனதோடு நம்பி எந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை கூறுகிறோமோ அந்த கஷ்டம் விரைவில் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.



This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:
Content publishing
Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media

For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160

a. Online Part Time Jobs from Home

b. Work from Home Jobs Without Investment

c. Freelance Jobs Online for Students

d. Mobile Based Online Jobs

e. Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob


Post a Comment

Previous Post Next Post